செம்மொழித் தமிழை செம்மொழியாக ஏற்று அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழகம் தொடர்ந்து எழுப்பிய உரத்தக் குரலுக்கும், நடத்திய தொடர் போராட்டங்களுக்கும் கிடைத்த வெற்றித் திருநாள் அக்டோபர் 12. 2004-ஆம் ஆண்டு இதே நாளில் இடதுசாரிகளின் ஆதரவு பெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தமிழுக்குச் செம்மொழி அங்கீகாரம் வழங்கி அறிவித்தது.